சாக்லேட்டுக்கு குட்பை! தேவக்கோட்டையில் கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தினம் கொண்டாட்டம்!

Jan 26, 2026,04:40 PM IST

சிவகங்கை:   சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.


நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிநாட்டுச் சாக்லேட்டுகள் வழங்கப்படும். ஆனால், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.


இந்த கொண்டாட்டத்தின் போது ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர்  செல்வம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி  கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய்  வழங்கப்பட்டது.




குறிப்பாக, இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை  மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர். மேலும், குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி மாணவ, மாணவியர் நந்தனா,  ருத்ரேஸ்வரன், ரித்திகா    ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.   


குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுப்பதை விட, சத்து நிறைந்த கடலை மிட்டாய் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நமது பண்பாட்டையும் ஆரோக்கியத்தையும் ஒருசேரக் காக்கும் முயற்சி எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த மாற்றத்தைப் பாராட்டியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மெஷின் மீது அக்கறை… மனிதர்கள் மீது ஏன் இல்லை?

news

அரங்கனின் பிரியாவிடை...!

news

புலம்பெயர் மண்ணில் மலர்ந்த நட்பு.. நெகிழ்ச்சியூட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்!

news

கழுகு போல பறக்க ஆசையா.. அப்புறம் எதுக்கு வாத்துகளோடு நீச்சலடிச்சுட்டு இருக்கீங்க!

news

சிலுவை நாயகனின் ஏழு வார்த்தைகள்!

news

ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!

news

தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்

news

எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்

news

திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்