சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிநாட்டுச் சாக்லேட்டுகள் வழங்கப்படும். ஆனால், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின் போது ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

குறிப்பாக, இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர். மேலும், குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி மாணவ, மாணவியர் நந்தனா, ருத்ரேஸ்வரன், ரித்திகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுப்பதை விட, சத்து நிறைந்த கடலை மிட்டாய் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நமது பண்பாட்டையும் ஆரோக்கியத்தையும் ஒருசேரக் காக்கும் முயற்சி எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த மாற்றத்தைப் பாராட்டியுள்ளனர்.
Anitha Radhakrishnan: முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு.. திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்
குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனு
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு
எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்
சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!
{{comments.comment}}