தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்த பின்னர் மாணவர்களுக்கு வழக்கமாக தரும் மிட்டாய்களுக்குப் பதில் கடலை மிட்டாய் கொடுத்து அசத்தினர் ஆசிரியர்கள்.
சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். இந்த சமயத்தில் தேசியக் கொடியேற்றும் வைபவத்திற்குப் பிறகு மாணவர்களுக்கு சாக்லேட், பல்லி மிட்டாய் உள்ளிட்டவை வழங்கப்படும். இவையெல்லாம் உடம்புக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிரம்பியவை.

எனவே சாக்லேட் போன்றவற்றுக்குப் பதில் மாணவர்களுக்கு கடலை மிட்டாய் கொடுத்து அசத்தி வருகிறது சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி நிர்வாகம். கடந்த சில வருடங்களாகவே இந்த நல்ல பழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இன்று நடந்த குடியரசு தின விழாவில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை முத்துமீனாள் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை, அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி மாணவ, மாணவியர் விஜய்கண்ணன், சபரிவர்ஷன், நந்தனா, ரித்திகா, தீபா, தவதுர்கா, ஹரிப்ரியா, லெட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}