குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை.. பரிதாபமாக பலி.. காதலர்கள் மீது பாய்ந்த வழக்கு

Mar 06, 2024,12:59 PM IST

சென்னை: குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அதிர்ஷ்டலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டது. இந்தக் குழந்தையை தங்கள் குழந்தை என கூறி தத்தெடுத்த காதலர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.


பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் பெண்கள் விடுதி வளாகத்தில் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து  போயிருந்தது. இதை பார்த்த யுவராணி என்பவர் கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார். 


அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. 




பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக  இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வந்தனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்கள் விடுதியில் இருக்கும் பெண்ணும் அவரது காதலரும் வந்து நாங்கள் தான் குழந்தையை அங்கு போட்டு சென்றோம் என்று முன்ஜாமீனுடன் போலீஸ் நிலையம் வந்தனர். 


காதலர்கள் இருவரும் நாங்கள் தான் குழந்தையின் பெற்றோர்கள் என கூறி வந்த நிலையில், அந்த பெண் குழந்தை தற்போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதையடுத்து அந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்