குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை.. பரிதாபமாக பலி.. காதலர்கள் மீது பாய்ந்த வழக்கு

Mar 06, 2024,12:59 PM IST

சென்னை: குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அதிர்ஷ்டலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டது. இந்தக் குழந்தையை தங்கள் குழந்தை என கூறி தத்தெடுத்த காதலர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.


பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் பெண்கள் விடுதி வளாகத்தில் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து  போயிருந்தது. இதை பார்த்த யுவராணி என்பவர் கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார். 


அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. 




பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக  இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வந்தனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்கள் விடுதியில் இருக்கும் பெண்ணும் அவரது காதலரும் வந்து நாங்கள் தான் குழந்தையை அங்கு போட்டு சென்றோம் என்று முன்ஜாமீனுடன் போலீஸ் நிலையம் வந்தனர். 


காதலர்கள் இருவரும் நாங்கள் தான் குழந்தையின் பெற்றோர்கள் என கூறி வந்த நிலையில், அந்த பெண் குழந்தை தற்போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதையடுத்து அந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்