சென்னை: குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அதிர்ஷ்டலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டது. இந்தக் குழந்தையை தங்கள் குழந்தை என கூறி தத்தெடுத்த காதலர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் பெண்கள் விடுதி வளாகத்தில் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து போயிருந்தது. இதை பார்த்த யுவராணி என்பவர் கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார்.
அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வந்தனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்கள் விடுதியில் இருக்கும் பெண்ணும் அவரது காதலரும் வந்து நாங்கள் தான் குழந்தையை அங்கு போட்டு சென்றோம் என்று முன்ஜாமீனுடன் போலீஸ் நிலையம் வந்தனர்.
காதலர்கள் இருவரும் நாங்கள் தான் குழந்தையின் பெற்றோர்கள் என கூறி வந்த நிலையில், அந்த பெண் குழந்தை தற்போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதையடுத்து அந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை தேர்வு செய்தது ஏன்? அமித்ஷா விளக்கம்
ஹைட்ரோ கார்பன் திட்டம்.. திமுகவின் துரோகங்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்: டாக்டர் அன்புமணி
வரும் 27,28 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவிற்கு அவரது உடல்நிலையே காரணம்.. வேறு காரணம் இல்லை: அமித்ஷா விளக்கம்!
கேஜிஎப் படத்தில் ஷெட்டி வேடத்தில் நடித்த.. பிரபல கன்னட நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்
தெரு நாய்களுக்காக.. டெல்லி முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்த ராஜேஷ் சக்ரியா!
நிழலில்லாத நாள் - அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள்!
சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற 22 வயதுப் பெண்ணுக்கு.. திடீர் அலர்ஜி.. அடுத்து நடந்த விபரீதம்!
காசி அல்வா.. நாக்குல வச்சா போதும்.. ஜிவ்வுன்னு டேஸ்ட் இறங்கும் பாருங்க.. வேற லெவல் ஸ்வீட்!
{{comments.comment}}