குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை.. பரிதாபமாக பலி.. காதலர்கள் மீது பாய்ந்த வழக்கு

Mar 06, 2024,12:59 PM IST

சென்னை: குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அதிர்ஷ்டலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டது. இந்தக் குழந்தையை தங்கள் குழந்தை என கூறி தத்தெடுத்த காதலர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.


பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் பெண்கள் விடுதி வளாகத்தில் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து  போயிருந்தது. இதை பார்த்த யுவராணி என்பவர் கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார். 


அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. 




பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக  இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வந்தனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்கள் விடுதியில் இருக்கும் பெண்ணும் அவரது காதலரும் வந்து நாங்கள் தான் குழந்தையை அங்கு போட்டு சென்றோம் என்று முன்ஜாமீனுடன் போலீஸ் நிலையம் வந்தனர். 


காதலர்கள் இருவரும் நாங்கள் தான் குழந்தையின் பெற்றோர்கள் என கூறி வந்த நிலையில், அந்த பெண் குழந்தை தற்போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதையடுத்து அந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்