டிரோனில் மருந்து அனுப்பி ரிஷிகேஷ் எய்ம்ஸ் சாதனை.. விரைவில் மதுரை எய்ம்ஸிலும் எதிர்பார்க்கலாமா!

Feb 17, 2023,10:13 AM IST
கார்வால்:  உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளுக்கு டிரோன் மூலம் காசநோய் மருந்துகளை டெலிவரி செய்து  ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.



கிட்டத்தட்ட மலைப் பகுதியில் 40 கிலோமீட்டர் வரை இந்த டிரோன் சென்று மருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இதற்கு அந்த டிரோன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம்தான். இதுவே சாலை மார்க்கமாக போயிருந்தால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆயிருக்குமாம்.

கார்வால் மாவட்டம் தேரி பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்குத்தான் இந்த மருந்துகள் டிரோன் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ரிஷிகோஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து இந்த டிரோன் செலுத்தப்பட்டது.  இது சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் மீனு சிங் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலை தூரத்தில், மலைப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க டிரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சோதனை முற்சியாகவே இந்த மருந்துகள் அனுப்பப்பட்டன. மருந்துகள் போய்ச் சேர்ந்ததும், அங்கிருந்து காசநோய் சோதனை மாதிரிகள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரியாக வந்து சேர்ந்தன.

டிரோன் மூலம் மருந்துகளை அனுப்புவதால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியது குறைகிறது. மேலும் மருந்துகளை விரைவாகவும் அவர்களால் பெற முடியும். பாதுகாப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் முன்பு இந்திய ராணுவம், பனி படர்ந்த பகுதிகளில் ராணுவத்தினருக்கு பூஸ்டர் டோஸ் கோவிட் ஊசி மருந்துகளை அனுப்ப டிரோன்களை முன்பு பயன்படுத்தியது.  அதேபோல மகாராஷ்டிராவிலும் தொலை தூர கிராமங்களுக்கு டிரோன்கள் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அதே பாணியில் தற்போது ரிஷிகேஷ் எய்ம்ஸ் இந்த மருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் இதுபோல தொலை தூர கிராமங்களுக்கு மருந்துகள் அனுப்பும் நாள் வரும் என்று நம்புவோம்!

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்