டிரோனில் மருந்து அனுப்பி ரிஷிகேஷ் எய்ம்ஸ் சாதனை.. விரைவில் மதுரை எய்ம்ஸிலும் எதிர்பார்க்கலாமா!

Feb 17, 2023,10:13 AM IST
கார்வால்:  உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளுக்கு டிரோன் மூலம் காசநோய் மருந்துகளை டெலிவரி செய்து  ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.



கிட்டத்தட்ட மலைப் பகுதியில் 40 கிலோமீட்டர் வரை இந்த டிரோன் சென்று மருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இதற்கு அந்த டிரோன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம்தான். இதுவே சாலை மார்க்கமாக போயிருந்தால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆயிருக்குமாம்.

கார்வால் மாவட்டம் தேரி பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்குத்தான் இந்த மருந்துகள் டிரோன் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ரிஷிகோஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து இந்த டிரோன் செலுத்தப்பட்டது.  இது சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் மீனு சிங் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலை தூரத்தில், மலைப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க டிரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சோதனை முற்சியாகவே இந்த மருந்துகள் அனுப்பப்பட்டன. மருந்துகள் போய்ச் சேர்ந்ததும், அங்கிருந்து காசநோய் சோதனை மாதிரிகள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரியாக வந்து சேர்ந்தன.

டிரோன் மூலம் மருந்துகளை அனுப்புவதால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியது குறைகிறது. மேலும் மருந்துகளை விரைவாகவும் அவர்களால் பெற முடியும். பாதுகாப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் முன்பு இந்திய ராணுவம், பனி படர்ந்த பகுதிகளில் ராணுவத்தினருக்கு பூஸ்டர் டோஸ் கோவிட் ஊசி மருந்துகளை அனுப்ப டிரோன்களை முன்பு பயன்படுத்தியது.  அதேபோல மகாராஷ்டிராவிலும் தொலை தூர கிராமங்களுக்கு டிரோன்கள் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அதே பாணியில் தற்போது ரிஷிகேஷ் எய்ம்ஸ் இந்த மருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் இதுபோல தொலை தூர கிராமங்களுக்கு மருந்துகள் அனுப்பும் நாள் வரும் என்று நம்புவோம்!

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்