- இரா. மும்தாஜ் பேகம்
திக்கெட்டும் தமிழ் முழங்க,
தீந்தமிழில்
பாக்கள் ஒலிக்க
மூவேந்தர் வளர்த்திட்ட
என் தமிழ் வளர்ந்திடவே. சங்கே முழங்கு!
குமரிக்கண்டத்திலே
குழந்தையாய்உருவெடுத்து
பன்னிலை வளங்கள் கண்ட
பாண்டியன்வளத்திட்ட தமிழ் என்று
சங்கே முழங்கு!

தேனில் கரும்பில்
தீஞ்சுவையாய்
வானில்கதிரோன்
அறிவொளியாய்
ஊனில்,உயிரில்
கலந்திருக்கும்
உன்னததமிழென்று
சங்கே முழங்கு!
பாரதியும்,பாரதிதாசனும்,
பகுத்தறிவு பெரியாரும்.
வாலியும், வைரமுத்தும்
வளர்த்திட்ட
என் தமிழ் வளர்க என்று
சங்கே முழங்கு!
ஔவையின்ஆத்திச்சூடியை
ஔடதமாய்
ஏற்று நாளும்
வள்ளுவனின் முப்பாலால்
வளர்ந்திட்ட
என் தமிழ் என்று
சங்கே முழங்கு!
தாழை மடல் போல்
தமிழ் மனம் பரவிடவே
ஏடுகளை ஏந்தி
நாம்
வளர்ப்போம் என்று
சங்கே முழங்கு!
(கவிஞர் இரா. மும்தாஜ் பேகம், பட்டதாரி ஆசிரியர்)
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}