- இரா. மும்தாஜ் பேகம்
திக்கெட்டும் தமிழ் முழங்க,
தீந்தமிழில்
பாக்கள் ஒலிக்க
மூவேந்தர் வளர்த்திட்ட
என் தமிழ் வளர்ந்திடவே. சங்கே முழங்கு!
குமரிக்கண்டத்திலே
குழந்தையாய்உருவெடுத்து
பன்னிலை வளங்கள் கண்ட
பாண்டியன்வளத்திட்ட தமிழ் என்று
சங்கே முழங்கு!

தேனில் கரும்பில்
தீஞ்சுவையாய்
வானில்கதிரோன்
அறிவொளியாய்
ஊனில்,உயிரில்
கலந்திருக்கும்
உன்னததமிழென்று
சங்கே முழங்கு!
பாரதியும்,பாரதிதாசனும்,
பகுத்தறிவு பெரியாரும்.
வாலியும், வைரமுத்தும்
வளர்த்திட்ட
என் தமிழ் வளர்க என்று
சங்கே முழங்கு!
ஔவையின்ஆத்திச்சூடியை
ஔடதமாய்
ஏற்று நாளும்
வள்ளுவனின் முப்பாலால்
வளர்ந்திட்ட
என் தமிழ் என்று
சங்கே முழங்கு!
தாழை மடல் போல்
தமிழ் மனம் பரவிடவே
ஏடுகளை ஏந்தி
நாம்
வளர்ப்போம் என்று
சங்கே முழங்கு!
(கவிஞர் இரா. மும்தாஜ் பேகம், பட்டதாரி ஆசிரியர்)
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
நிறை குடம்
{{comments.comment}}