டெல்லி: டெல்லியில் பெய்த பலத்த மழையால் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக முதலாவது டெர்மினலில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரையைத் தாங்கி நிற்கும் இரும்புத் தூண்கள் முறிந்து விழுந்ததால் மேற்கூரை அப்படியே கீழே விழுந்து விட்டது.
இந்த விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சில கார்களும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக முதலாவது டெர்மினலில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதலாவது டெர்மினலில் உள்நாட்டு விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதலாவது டெர்மினல் மூடப்பட்டுள்ளதால் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி வரை இங்கு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலுக்கு மேல்தான் விமான சேவை தொடங்கும் என்று தெரிகிறது.
காலை 5.30 மணிக்கு பெய்த பேய் மழையில் விமான நிலையம் சிக்கிக் கொண்டது. பல கார்கள், வாகனங்கள் இதில் சிக்கி நசுங்கிப் போய் விட்டன. உயிரிழந்த நபர் காருக்குள் சிக்கியிருந்தார். அவரது உடலில் இரும்புக் கம்பி பாய்ந்திருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மீட்பு மற்றும் சரி செய்யும் பணிகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சிரப்பு நேரடியாக பார்வையிட்டு முடுக்கி விட்டு வருகிறார். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழை நீரில் மிதக்கும் டெல்லி
இதற்கிடையே, கன மழை காரணமாக டெல்லியே மிதக்கிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகள் சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey
மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
{{comments.comment}}