- அ.கோகிலா தேவி
சென்னை: பிரதமர் சூர்ய கர் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவி அதன் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது.
வீட்டுக் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவி தூய்மையான மற்றும் மலிவான மின்சாரத்தை 10 மில்லியன் (1 கோடி) குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 650 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹5780 கோடி) நிதிக் கடனை அங்கீகரித்துள்ளது.
வீடுகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்ப முதலீடு மிக அதிகமாக இருக்கும். இந்த கடன் பிணையம் தேவையில்லாத குறைந்த வட்டியிலான கடன்களை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதை எளிதாக்குகிறது. இது நிதி நெருக்கடியில் தடுமாறும் பல குடும்பங்களுக்கு நேரடியான பயனளிக்கும்.

இத்திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாத மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும். இது அவர்களுக்கு ஆண்டுக்கு ₹15000 முதல்₹18000 வரை சேமிப்பை தரும். உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு விற்க அனுமதிப்பதால் இத்திட்டம் பல குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் ஒரு வழியாகவும் மாறுகிறது.
2026 ஆம் ஆண்டுக்குள் 40 GW கூரை சூரிய சக்தி திறனை நிறுவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும். போதுமான மனிதவளம் இல்லாததால் அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்புற மக்களிடையே சூரிய மின்சக்தியின் நன்மைகள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}