- அ.கோகிலா தேவி
சென்னை: பிரதமர் சூர்ய கர் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவி அதன் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது.
வீட்டுக் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவி தூய்மையான மற்றும் மலிவான மின்சாரத்தை 10 மில்லியன் (1 கோடி) குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 650 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹5780 கோடி) நிதிக் கடனை அங்கீகரித்துள்ளது.
வீடுகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்ப முதலீடு மிக அதிகமாக இருக்கும். இந்த கடன் பிணையம் தேவையில்லாத குறைந்த வட்டியிலான கடன்களை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதை எளிதாக்குகிறது. இது நிதி நெருக்கடியில் தடுமாறும் பல குடும்பங்களுக்கு நேரடியான பயனளிக்கும்.

இத்திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாத மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும். இது அவர்களுக்கு ஆண்டுக்கு ₹15000 முதல்₹18000 வரை சேமிப்பை தரும். உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு விற்க அனுமதிப்பதால் இத்திட்டம் பல குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் ஒரு வழியாகவும் மாறுகிறது.
2026 ஆம் ஆண்டுக்குள் 40 GW கூரை சூரிய சக்தி திறனை நிறுவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும். போதுமான மனிதவளம் இல்லாததால் அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்புற மக்களிடையே சூரிய மின்சக்தியின் நன்மைகள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தேனியில் கோலாகலம்: 79-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி.. அ.ஹரிஸ் அசத்தல்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு என்னாச்சு?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Cooking Tips: சோயா சங்க் 65.. மொறுமொறுன்னு சாப்பிட சரியான சைட் டிஷ்!
Tn election 2026 தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது...6 மணிக்கு பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள்
மருதாணிச் செவப்பே!
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
{{comments.comment}}