தட்டி தூக்கிய போலீசார்.. "ரவுடி பேபி" சூர்யா திடீர் கைது.. ஏன்?

Oct 12, 2023,03:58 PM IST

மதுரை: டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய கணவரான சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோரை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். 


கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ராவுக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் இந்த இருவரையும்  கைது செய்துள்ளனர்.




மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக் டாக்கில் ரவுடி பேபி சூர்யா என தனது பெயரை மாற்றிக் கொண்டு வீடியோ போட்டு வந்தார். அவரது குண்டக்க மண்டக்க வீடியோக்களால் வேகமாக பிரபலமடைந்தார். 


ஆபாசமான பேச்சு மற்றும் ஆபாசமான செய்கைகள் அடங்கிய அவரது வீடியோக்களால் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார். இந்த நிலையில்தான் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்தார்.




இவருடன் இவரது கணவராக கூறப்படும் சிக்கந்தரும் சேர்ந்தே சிறைக்குப் போயிருந்தார்.  இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ரா என்பவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில்  சிக்கந்தரை பற்றிய அவதூறான விஷயங்களை சித்ரா வெளியிட்டதால் சிக்கந்தர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து பதிலுக்கு சிக்கந்தரும் சித்ராவை வம்பிக்கிழுத்து கேலி செய்து வீடியோ போட ஆரம்பித்தார். இந்த நிலையில் சித்ரா சார்பில் மதுரை சைபர் கிரைம் போலீஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், தனது மகளின் அந்தரங்களை வீடியோவாக வெளியிடுவேன் என கூறி சிக்கந்தரும், சூர்யாவும் மிரட்டல் விடுவதாக  கூறியிருந்தார்.


மகளைப் பற்றி அவதூறாக பேசியதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா இருவரும் தன்னை மிரட்டுவதாகவும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாதர் சித்ரா.  இதன் அடிப்படையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தரை இன்று கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்