மதுரை: டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய கணவரான சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோரை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ராவுக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் இந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக் டாக்கில் ரவுடி பேபி சூர்யா என தனது பெயரை மாற்றிக் கொண்டு வீடியோ போட்டு வந்தார். அவரது குண்டக்க மண்டக்க வீடியோக்களால் வேகமாக பிரபலமடைந்தார்.
ஆபாசமான பேச்சு மற்றும் ஆபாசமான செய்கைகள் அடங்கிய அவரது வீடியோக்களால் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார். இந்த நிலையில்தான் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்தார்.
இவருடன் இவரது கணவராக கூறப்படும் சிக்கந்தரும் சேர்ந்தே சிறைக்குப் போயிருந்தார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ரா என்பவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் சிக்கந்தரை பற்றிய அவதூறான விஷயங்களை சித்ரா வெளியிட்டதால் சிக்கந்தர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பதிலுக்கு சிக்கந்தரும் சித்ராவை வம்பிக்கிழுத்து கேலி செய்து வீடியோ போட ஆரம்பித்தார். இந்த நிலையில் சித்ரா சார்பில் மதுரை சைபர் கிரைம் போலீஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், தனது மகளின் அந்தரங்களை வீடியோவாக வெளியிடுவேன் என கூறி சிக்கந்தரும், சூர்யாவும் மிரட்டல் விடுவதாக கூறியிருந்தார்.
மகளைப் பற்றி அவதூறாக பேசியதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா இருவரும் தன்னை மிரட்டுவதாகவும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாதர் சித்ரா. இதன் அடிப்படையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தரை இன்று கைது செய்தனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}