மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை தற்போது ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சேட்டன் சிங். ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் ஆவார். இவர் தன்னிடமிருந்த அதிகாரப்பூர்வ தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 பயணிகள், சக போலீஸ்காரர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் டீக்கா ராம் மீனா ஆகியோரை இவர் சுட்டுள்ளார். அதில் சுடப்பட்ட ஆர்பிஎப் வீரர் மட்டும் உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.
முதலில் உதவி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் அதன் பின்னர் அடுத்த பெட்டிக்குப் போய் அங்கிருந்த 3 பயணிகளை சுட்டுக் கொன்றார். இந்த கொலை பாதக செயலை செய்து ரயிலின் அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓட முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!
நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்
கார்த்திகையில்!
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
{{comments.comment}}