மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை தற்போது ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சேட்டன் சிங். ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் ஆவார். இவர் தன்னிடமிருந்த அதிகாரப்பூர்வ தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 பயணிகள், சக போலீஸ்காரர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் டீக்கா ராம் மீனா ஆகியோரை இவர் சுட்டுள்ளார். அதில் சுடப்பட்ட ஆர்பிஎப் வீரர் மட்டும் உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.
முதலில் உதவி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் அதன் பின்னர் அடுத்த பெட்டிக்குப் போய் அங்கிருந்த 3 பயணிகளை சுட்டுக் கொன்றார். இந்த கொலை பாதக செயலை செய்து ரயிலின் அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓட முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}