மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை தற்போது ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சேட்டன் சிங். ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் ஆவார். இவர் தன்னிடமிருந்த அதிகாரப்பூர்வ தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 பயணிகள், சக போலீஸ்காரர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் டீக்கா ராம் மீனா ஆகியோரை இவர் சுட்டுள்ளார். அதில் சுடப்பட்ட ஆர்பிஎப் வீரர் மட்டும் உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.
முதலில் உதவி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் அதன் பின்னர் அடுத்த பெட்டிக்குப் போய் அங்கிருந்த 3 பயணிகளை சுட்டுக் கொன்றார். இந்த கொலை பாதக செயலை செய்து ரயிலின் அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓட முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
{{comments.comment}}