மும்பை அருகே பயங்கரம்.. ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி

Jul 31, 2023,10:29 AM IST

மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார். 


மகாராஷ்டிரா  மாநிலம் பால்கார் ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.  துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை தற்போது ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சேட்டன் சிங். ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் ஆவார். இவர் தன்னிடமிருந்த அதிகாரப்பூர்வ தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 பயணிகள், சக போலீஸ்காரர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் டீக்கா ராம் மீனா ஆகியோரை இவர் சுட்டுள்ளார். அதில் சுடப்பட்ட  ஆர்பிஎப் வீரர் மட்டும் உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.


முதலில் உதவி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் அதன் பின்னர் அடுத்த பெட்டிக்குப் போய் அங்கிருந்த 3 பயணிகளை சுட்டுக் கொன்றார்.  இந்த கொலை பாதக செயலை செய்து ரயிலின் அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓட முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்