மும்பை: ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுத்தது. அதாவது அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட்டு புதிதாக ரூ. 2000 நோட்டை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் இந்த ரூபாய் நோட்டும் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் குறைந்து விட்டது. ரூபாய் நோட்டை அச்சிடுவதை நிறுத்தி விட்ட நிலையில் புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தன. அதுவும் கூட நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் 2000 நோட்டை திரும்பப் பெறுவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டைத் திருப்பித் தருவதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடுவும் தற்போது முடிந்து விட்ட நிலையில் இதுவரை 96 சதவீத நோட்டுக்களே திரும்பி வந்துள்ளதாம். இன்னும் ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வரவில்லை என்று ரசிர்வ் வங்கி கூறியுள்ளது.
தற்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட கையில் அதை வைத்திருப்போர் இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் ஒப்படைக்கலாம். தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ இதைச் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் தரப்பட்டது. பின்னர் இது அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மட்டுமே இதை மாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், பேலாப்பூர், புவனேஸ்வர், சண்டிகர், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, லக்னோ, கொல்கத்தா, கான்பூர், மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த ரூபாய் நோட்டுக்களை ஒப்படைக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}