ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டு.. யாரு கிட்டப்பா இருக்கு.. இன்னும் ரிட்டர்ன் ஆகலையாமே!

Dec 01, 2023,05:14 PM IST

மும்பை: ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுத்தது. அதாவது அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட்டு புதிதாக ரூ. 2000 நோட்டை அறிமுகப்படுத்தியது. 


இருப்பினும் இந்த ரூபாய் நோட்டும் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் குறைந்து விட்டது. ரூபாய் நோட்டை அச்சிடுவதை நிறுத்தி விட்ட நிலையில் புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தன. அதுவும் கூட நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது.




இந்த நிலையில் 2000 நோட்டை திரும்பப் பெறுவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டைத் திருப்பித் தருவதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடுவும் தற்போது முடிந்து விட்ட நிலையில் இதுவரை 96 சதவீத நோட்டுக்களே திரும்பி வந்துள்ளதாம். இன்னும் ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வரவில்லை என்று ரசிர்வ் வங்கி கூறியுள்ளது.


தற்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட கையில் அதை வைத்திருப்போர் இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் ஒப்படைக்கலாம். தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ இதைச் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் தரப்பட்டது. பின்னர் இது அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மட்டுமே இதை மாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், பேலாப்பூர், புவனேஸ்வர், சண்டிகர், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, லக்னோ, கொல்கத்தா, கான்பூர், மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த ரூபாய் நோட்டுக்களை ஒப்படைக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு முள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்