ரசிப்பேனென சொன்னால்!

Aug 26, 2026,11:26 AM IST

- மொழிப்பித்தன் இரா ச குமார்


ரசிக்க நானிருக்கிறேன்

நீயெழுதென

சொல்பவரா நீங்கள்

உங்களுக்கே உங்களுக்காக 

நானுமெழுதுவேன்

நாளுமொரு கவிதை...


உங்களிடமொரு கோரிக்கை

எழுதுகோலின் விருப்பத்துக்கு

விட முடியுமா?..




இதையெழுது 

அதையும் சேர்த்தெழுதெனும் 

கட்டாயப்படுத்தலை 

தவிர்க்கவும்

கூடவும் கூடாது

காரணம்

இந்த 

எழுதுகோலிருக்கிறதே 

எழுது கோல்

எழுத மறுக்கும்

ஏடாகூடமாய் கோபப்படும்...


தானே

சிலப்பதிகாரமெழுதியதாய் 

நினைப்பு

திமிர்

அகம்பாவம் ஆணவம்

கண்டதை கிறுக்கி கவிதையென சொல்லும் இந்த

எழுதுகோலுக்கு...


சுருக்கமாய் சொன்னால்

என் எழுதுகோலுக்கு 

கொஞ்சம்

நானே 

நான் மட்டுமே

எனுமொரு மமதை...


காட்டிக்கொள்ளாது 

பவ்யமாய் 

இருக்கும்

அத்தனையும் நடிப்பென அறிக...


ஒருவேளை

அன்பொழுக கேட்டுக்கொண்டால் 

நிறைய நிறைய

கொள்ளவு தாண்டியும்

தனக்குள் 

வழிய வழிய

மை

நிரப்பி

ஆரவரித்து 

கும்மாளமிட்டு 

எழுதும் 

என்னென்னவோ

எண்ணற்ற தலைப்புகளில்

எழுதுமிந்த எழுதுகோல் ...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரசிப்பேனென சொன்னால்!

news

"ஓணம் வந்தல்லோ... ஓணம் வந்தல்லோ"

news

Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?

news

2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!

news

" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு

news

NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!

news

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

news

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்

news

தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்