- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
பூட்டி வைத்த மனதினிலே பிரவாகம்...
ஏனென்று அறியாத ஒரு வேகம் ...
புரியாத மௌனமும் சில நேரம் ...
புலப்படாத வினாக்களும் மனதோரம்...
அழுதோய்ந்த கண்களில் வற்றும் ஈரம் ...

ஆற்றுப்படவே ஓய்ந்தது மன பாரம் ...
காலம் மாற்றும் என மனம் தாங்கும் ...
கற்றேஇருந்தாலும் புரியாது
ஏன் இந்த சோகம்...
இறைவா உன் பதமலர் சரணடைய உளம் ஏங்கும்...
தருவாய் அமைதி என்றே தினம் தூங்கும் ...
உன் அருளால் அனைத்துமே இனி நீங்கும்
உள்ளத்தில் ஆன்ம ஒளி ஒன்றே தேங்கும் ....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}