சென்னை: ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தோனி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை 8 மணிக்கு சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் தோனிக்கு, இந்த ஐபிஎல் தொடரே கடைசி தொடராக இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். தோனிக்கு பதிலாக சென்னையின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், சென்னை அணியின் சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.
இது நாள் வரை கேப்டன் தோனிக்காகவே ஐபிஎல் தொடரை அதிக அளவில் ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால் கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியிடம் இருக்கும் அந்த கிரேஸ் இனி போட்டிகளில் இருக்காது என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுபட்டுள்ள தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மறுபக்கம், புதிய கேப்டனாகியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் மிகுந்த திறமையான் அணிகளில் ஒன்றாகவும் சிஎஸ்கே திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கேப்டனாக 226 போட்டிகளில் சிஎஸ்கேவை வழி நடத்தியுள்ளார் தோனி. அதில் 133 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}