சென்னை: ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தோனி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை 8 மணிக்கு சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் தோனிக்கு, இந்த ஐபிஎல் தொடரே கடைசி தொடராக இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். தோனிக்கு பதிலாக சென்னையின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், சென்னை அணியின் சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.
இது நாள் வரை கேப்டன் தோனிக்காகவே ஐபிஎல் தொடரை அதிக அளவில் ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால் கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியிடம் இருக்கும் அந்த கிரேஸ் இனி போட்டிகளில் இருக்காது என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுபட்டுள்ள தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மறுபக்கம், புதிய கேப்டனாகியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் மிகுந்த திறமையான் அணிகளில் ஒன்றாகவும் சிஎஸ்கே திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கேப்டனாக 226 போட்டிகளில் சிஎஸ்கேவை வழி நடத்தியுள்ளார் தோனி. அதில் 133 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}