- ஸ்வர்ணலட்சுமி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த 18 படிகளை ஏறி சென்றால், கொடி மரத்தை கடந்து சென்று, சுவாமி ஐயப்பனின் சன்னதியை அடைய முடியும். தங்க தகடுகளால் வேயப்பட்டு இந்த 18 படிகள் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர மாதந்தோறும் சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் போதும் இந்த படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சபரிமலையில் நடத்தப்படும் மிக காஸ்ட்லியான பூஜை இந்த படிபூஜை தான். 2036ம் ஆண்டு வரை படி பூஜை செய்வதற்கான புக்கிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

இந்த 18 படிகள் புனிதமானவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 18 படிகளுக்கு என்ன அர்த்தம்? இவைகள் எதை குறிக்கின்றன? இந்த 18 படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. வாங்க சபரிமலை 18 படிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
சபரிமலை 18 படி ரகசியங்கள் :
முதல் படி - மெய்
2ம் படி - வாய்
3 ம் படி - கண்
4 ம் படி - மூக்கு
5ம் படி - செவி
6ம் படி - காமம்
7ம் படி - குரோதம்
8ம் படி - மோஹம்
9ம் படி - மதம்
10ம் படி -மாச்சரியம்
11ம் படி - லோபம்
12ம் படி - டம்பம்
13ம் படி - அசூயை
14ம் படி - ஸத்வம்
15ம் படி - ராஜஸம்
16ம் படி - தாமஸம்
17 ம் படி - வித்யை
18ம் படி - அவித்யை
மனிதன் அடக்க வேண்டிய, வாழ்க்கையில் கடந்து வர வேண்டிய ஐம்புலன்கள், ஐம்பொறிகள், உணர்வுகள், 3 விதமான குணங்கள், ஞானம், அஞ்ஞானம் ஆகியவற்றையே இந்த 18 படிகள் குறிக்கின்றன. யார் ஒருவர் இந்த 18 விஷயங்களையும் கடந்து வருகிறாரோ அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலையை அடைவார். பரம்பொருளாகிய இறைவனை அடைய முடியும் என்ற வாழ்க்கை தத்துவமாகும். சுவாமியே சரணம் ஐயப்பா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}