Sabarimalai Iyappan temple.. சபரிமலை 18 படிகள் எதை உணர்த்துகின்றன தெரியுமா ?

Nov 27, 2024,08:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த 18 படிகளை ஏறி சென்றால், கொடி மரத்தை கடந்து சென்று, சுவாமி ஐயப்பனின் சன்னதியை அடைய முடியும். தங்க தகடுகளால் வேயப்பட்டு இந்த 18 படிகள் பாதுகாக்கப்படுகிறது. 


இது தவிர மாதந்தோறும் சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் போதும் இந்த படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சபரிமலையில் நடத்தப்படும் மிக காஸ்ட்லியான பூஜை இந்த படிபூஜை தான். 2036ம் ஆண்டு வரை படி பூஜை செய்வதற்கான புக்கிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.




இந்த 18 படிகள் புனிதமானவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 18 படிகளுக்கு என்ன அர்த்தம்? இவைகள் எதை குறிக்கின்றன? இந்த 18 படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. வாங்க சபரிமலை 18 படிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.


சபரிமலை 18 படி ரகசியங்கள் : 


முதல் படி -  மெய்

2ம் படி - வாய்

3 ம் படி - கண்

4 ம் படி - மூக்கு

5ம் படி - செவி

6ம் படி - காமம்

7ம் படி - குரோதம்

8ம் படி - மோஹம்

9ம் படி - மதம்

10ம் படி -மாச்சரியம்

11ம் படி - லோபம்

12ம் படி - டம்பம்

13ம் படி - அசூயை

14ம் படி - ஸத்வம்

15ம் படி - ராஜஸம்

16ம் படி - தாமஸம்

17 ம் படி - வித்யை

18ம் படி - அவித்யை


மனிதன் அடக்க வேண்டிய, வாழ்க்கையில் கடந்து வர வேண்டிய ஐம்புலன்கள், ஐம்பொறிகள், உணர்வுகள், 3 விதமான குணங்கள், ஞானம், அஞ்ஞானம் ஆகியவற்றையே இந்த 18 படிகள் குறிக்கின்றன. யார் ஒருவர் இந்த 18 விஷயங்களையும் கடந்து வருகிறாரோ அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலையை அடைவார். பரம்பொருளாகிய இறைவனை அடைய முடியும் என்ற வாழ்க்கை தத்துவமாகும். சுவாமியே சரணம் ஐயப்பா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்