சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர். எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தவர். அவருக்கு எதிரான அனைத்து செய்திகளும் முட்டாள்தனமானவை, அவதூறானவை. அனைவரும் இப்படி எழுதுவதை, பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அவரது மனைவி சாய்ரா பானு கூறியுள்ளார்.
தனது கணவரிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார் சாய்ரா பானு. இது ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதை விட கொடுமையாக ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தேவையில்லாத வதந்திகளை பலர் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக சில யூடியூபர்கள் மிகவும் மோசமான முறையில் பேசி வருகிறார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர்.ரஹ்மான், தன்னைப் பற்றி அவதூறு பேசி வரும் யூடியூபர்கள் உள்ளிட்டோருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளார். அவதூறு வீடியோக்கள், செய்திகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சாய்ரா பானு ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறேன். அனைத்து யூடியூபர்கள், தமிழ் ஊடகங்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் அவருக்கு எதிராக அவதூறு பரப்பாதீர்கள். அவர் உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர். எனது உடல் நலத்தால்தான் நான் சென்னையில் இருக்க முடியவில்லை. சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன். அவர் இசைப் பணியில் பிசியாக உள்ளதால் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனது பிள்ளைகளையும் தொல்லை செய்ய விரும்பாமல்தான் பிரிய முடிவு செய்தேன்.
அவர் மிக மிக நல்லவர். அவரை நான் நம்புகிறேன். அவர் எனக்கு சிறந்த வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். எங்களுடைய பிரைவசியில் தலையிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை. எனது சிகிச்சை முடிந்ததும் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம். அவரைப் பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் அவதூறானவை, தவறானவை என்று கூறியுள்ளார் சாய்ரா பானு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}