சென்னை: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் இன்னும் வளரவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் தோன்றியவுடன் தீம் சாங் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார் விஜய். அப்போது விஜய் பேசுகையில்,
தங்களின் கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக தான். நாம் பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். அவர்களுடன் கூட்டணி வைக்க நாம் என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா? ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் இடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது என்று கூறியிருந்தார்.
இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை. எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும். தவெக தலைவர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கூறியுள்ளார்.
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி
பத்து மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!
Mr.Prime Minister என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை: நடிகர் சரத்குமார்
ஷ்ரேயாஸ் ஐயரை ஒரு நாள் டீமுக்கான கேப்டனாக்கப் போறோமா.. மறுக்கும் பிசிசிஐ
நிரம்பி வழியும் பவானிசாகர் அணை.. பார்க்கவே படு ஜோரா இருக்கு!
தங்கம் விலை நிலவரம்... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}