ராதிகா தேர்தலில் ஜெயிக்கணும்.. விருதுநகர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

Jun 03, 2024,01:43 PM IST

விருதுநகர்: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி வரை நடைபெற்றது. இதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை  எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 




நாடாளுமன்ற  தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னர் ராதிகாவின் கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அந்த கட்சியை பாஜகவுடன் இணைந்த பின்னர் தான் ராதிகா இந்ததேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் ராதிகாவிற்கு பாஜக ஒதுக்கிய அதே தொகுதியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார். அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.


கடுமையான மும்முனை போட்டி நிகழும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று சரத்குமார் விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். ராதிகாவும் உடன் இருந்தார். சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்