ராதிகா தேர்தலில் ஜெயிக்கணும்.. விருதுநகர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

Jun 03, 2024,01:43 PM IST

விருதுநகர்: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி வரை நடைபெற்றது. இதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை  எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 




நாடாளுமன்ற  தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னர் ராதிகாவின் கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அந்த கட்சியை பாஜகவுடன் இணைந்த பின்னர் தான் ராதிகா இந்ததேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் ராதிகாவிற்கு பாஜக ஒதுக்கிய அதே தொகுதியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார். அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.


கடுமையான மும்முனை போட்டி நிகழும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று சரத்குமார் விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். ராதிகாவும் உடன் இருந்தார். சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

news

மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

news

அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!

news

திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை

news

பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

news

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

news

மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை

news

சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்