சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவும், முன்னாள் முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் திடீர் என சந்தித்து பேசிக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சில நிமிடம் பேசிக் கொண்டனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக கட்சியினர், அதிமுக கட்சியினர், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுகவினர் அண்ணா நினைவிடத்திற்கு அமைதி பேரணி நடத்தி வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிோயரும் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் அங்கு இருந்ததால், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் வந்த சசிகலாவை நோக்கிச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவரிடம் வணக்கம் கூறி பேசினார்.
இதையடுத்து காரை விட்டு இறங்கிய சசிகலா, ஓ.பி.எஸ்ஸிடம் சிறிது நேரம் பேசி விட்டு பின்னர் காரில் ஏறிச் சென்றார். கருப்பு நிற சேலையில் வந்திருந்தார் சசிகலா. பல வருடங்களுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் இருவரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது ஒருவரை ஒருவர் சந்திக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேரும். அனைவரும் இணைவோம். ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியிருந்தார் சசிகலா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்று நடந்த சந்திப்பு இரு தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் கட்சிக்கு சசிகலா வாழ்த்து
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா பேசுகையில், நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக தான் ஆரம்பத்தில் இருந்து நினைத்து கொண்டிருக்கின்றேன். தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான். நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது வரவேற்கத்தக்கது என்றார்.
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
{{comments.comment}}