"நல்லாருக்கீங்களா"..  அண்ணா நினைவிடத்தில்.. ஓ.பி.எஸ்ஸிடம் நலம் விசாரித்த சசிகலா!

Feb 03, 2024,06:03 PM IST

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவும், முன்னாள் முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் திடீர் என சந்தித்து பேசிக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சில நிமிடம் பேசிக் கொண்டனர்.


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக கட்சியினர், அதிமுக கட்சியினர், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுகவினர் அண்ணா நினைவிடத்திற்கு அமைதி பேரணி நடத்தி வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிோயரும் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் அங்கு இருந்ததால், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் வந்த சசிகலாவை நோக்கிச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவரிடம் வணக்கம் கூறி பேசினார்.




இதையடுத்து காரை விட்டு இறங்கிய சசிகலா, ஓ.பி.எஸ்ஸிடம் சிறிது நேரம் பேசி விட்டு பின்னர் காரில் ஏறிச் சென்றார். கருப்பு நிற சேலையில் வந்திருந்தார் சசிகலா.  பல வருடங்களுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் இருவரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது ஒருவரை ஒருவர் சந்திக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில்தான் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேரும். அனைவரும் இணைவோம். ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியிருந்தார் சசிகலா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்று நடந்த சந்திப்பு இரு தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 


விஜய் கட்சிக்கு சசிகலா வாழ்த்து


இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா பேசுகையில், நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக தான் ஆரம்பத்தில் இருந்து நினைத்து கொண்டிருக்கின்றேன். தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான். நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள்.


ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது வரவேற்கத்தக்கது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

news

தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

news

பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்

news

விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!

news

விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

news

தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

news

ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்