சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

Jan 04, 2025,07:14 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகில்  பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 100க்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர்.இந்த பட்டாசு ஆலையில் 4 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து எற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர்.




இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது சுதீனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தலா ஒரு லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!

news

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போன 24 லட்சம் பேரின் பெயர்கள்

news

டைரக்டர் ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்? அவரே சொன்ன செம தகவல்

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்

news

அஜித் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த வேண்டுகோள்

news

டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்

news

கோகுலம் காத்த கோபாலனே.. காலத்தைக் காத்த காகுத்தனே?

news

தவெக ரோட்ஷோவுக்கு அனுமதி இல்லை.. கூட்டம் நடத்தவும் குறுகிய காலம்.. புதுச்சேரி திட்டம் கேன்சல்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2025... இன்று கார்த்திகை தீபத் திருநாள்

அதிகம் பார்க்கும் செய்திகள்