விருதுநகர்: சாத்தூர் அருகில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 100க்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர்.இந்த பட்டாசு ஆலையில் 4 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து எற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது சுதீனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தலா ஒரு லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10th பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. சிவகங்கை முதலிடத்தை பிடித்து சாதனை..!
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
{{comments.comment}}