டெல்லி: பட்டாசுக்குத் தடை விதிப்பதாக இருந்தால் அதை நாடு முழுவதும் பண்ணுங்க. தலைநகர் டெல்லிக்கு மட்டும் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை வருமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளுக்குத் தடை உள்ளது. இதை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தபோதுதான் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இதுகுறித்துக் கூறுகையில், ஒரு கொள்கை இருந்தால், அது நாடு தழுவிய கொள்கையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் டெல்லியில் இருக்கிறது என்பதற்காக, டெல்லி மக்களுக்கு மட்டும் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அமிர்தசரஸ் போன்ற நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு அமிர்தசரஸுக்கு சென்றபோது, டெல்லியை விட அங்கு மாசுபாடு அதிகமாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் வசதியானவர்கள் என்பதற்காக, மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்காமல் இருக்கக் கூடாது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அவர் வலியுறுத்தினார்.
ஏப்ரல் மாதத்தில், டெல்லி மற்றும் NCR (National Capital Region) பகுதிகளில் பட்டாசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.
தற்போதைய தலைமை நீதிபதியின் கருத்தால் நாடு தழுவிய அளவில் பட்டாசுக்குத் தடை வருமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளது. பட்டாசுத் தொழிலை நம்பி பல லட்சம் பேர் உள்ளனர் என்பதால் இதில் பொத்தாம் பொதுவான தடை வருமா என்று தெரியவில்லை. அதேசமயம், அதிக புகை இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கும் வகையில் நடவடிக்கை வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}