கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் போராட்டத்தை கைவிடும் படி அறிவித்தும் பணிக்கு திரும்பாமல் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பும்படி சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாக்டர்கள் போராட்டத்தால் நாட்டில் பதட்ட நிலை நிலவுவதையும், மக்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டம் கலவரமாகவும் மாறியது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் கடந்த 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி உள்ளது. இதுதான் உயிரிழந்த பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?.
டாக்டர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. நடவடிக்கை எடுக்க இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறும் வரை காத்திருக்க முடியாது. மேற்குவங்க அரசால் ஏன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் போனது?. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை. இந்த வழக்கு தொடர்பான நிலையை அறிக்கையாக சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு திருப்பும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}