பூரி: ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15க்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து மே மாதம் கோடைகால விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வை நோக்கி பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களும் தேர்வை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை மிக மோசமாக நிலவி வருகிறது. மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் 10 ,11,12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை, மதியம் என மாறி மாறி பள்ளி வேலை நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மதிய வேலைகளில் வெயில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அங்கன்வாடி மையங்கள் காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}