பூரி: ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15க்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து மே மாதம் கோடைகால விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வை நோக்கி பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களும் தேர்வை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை மிக மோசமாக நிலவி வருகிறது. மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் 10 ,11,12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை, மதியம் என மாறி மாறி பள்ளி வேலை நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மதிய வேலைகளில் வெயில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அங்கன்வாடி மையங்கள் காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}