Scorching Summer.. ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையால்.. பள்ளி நேரம் மாற்றம்‌..!

Mar 21, 2025,06:11 PM IST

பூரி:  ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15க்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து மே மாதம் கோடைகால விடுமுறை விடப்படுவது வழக்கம். 


அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வை நோக்கி பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களும் தேர்வை எதிர்நோக்கி  தயாராகி வருகின்றனர். 




இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை மிக மோசமாக நிலவி வருகிறது. மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் 10 ,11,12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை, மதியம் என மாறி மாறி பள்ளி வேலை நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மதிய வேலைகளில் வெயில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அங்கன்வாடி மையங்கள் காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. 


இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்