பூரி: ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15க்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து மே மாதம் கோடைகால விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வை நோக்கி பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களும் தேர்வை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை மிக மோசமாக நிலவி வருகிறது. மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் 10 ,11,12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை, மதியம் என மாறி மாறி பள்ளி வேலை நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மதிய வேலைகளில் வெயில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அங்கன்வாடி மையங்கள் காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}