அதிர வைக்கும் அஸ்மிதா படேல்.. ரூ. 53 கோடியை திருப்பிச் செலுத்தணும்.. செபி போட்ட உத்தரவு!

Feb 09, 2025,01:52 PM IST

மும்பை: அஸ்மிதா படேல் என்பவருக்கும், அவரது நிறுவனத்துக்கும் இந்தியாவின் செபி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அஸ்மிதா படேலும் அவரது நிறுவனமும் வசூலித்த ரூ. 53 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.


யார் இந்த அஸ்மிதா படேல்?


இவரது முழுப் பெயர் அஸ்மிதா ஜிதேஷ் படேல். குஜராத்தைச் சேர்ந்த  பெண்மணி. கடந்த 17 வருடமாக நிதித்துறையில் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளார். வர்த்தக பாடம் எடுக்கும் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். நிதிக் கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளாராம்.


அஸ்மிதா படேல் குளோபல்  வர்த்தகப் பள்ளி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் இயக்குநராகவும் இருக்கிறார். நவி மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. தனக்குத் தானே She Wolf of the Stock Market மற்றும் Options Queen என்று பட்டம் சூட்டிக் கொண்டவர் அஸ்மிதா படேல். தனக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.




asmitapatel.com என்ற தனது இணையதளம் மூலமாக நிதி இன்ப்ளூயன்ஸராக பலருக்கும் யோசனைகள், புரமோஷன்கள், ஆலோசனைகள், உதவிகள் வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களிலும் இவர் பிரபலமாக இருக்கிறார். யூடியூபில் மட்டும் 5.26 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 2.9 லட்சம் பாலோயர்கள் உள்ளனராம். பேஸ்புக்கில் 73,000 பாலோயர்கள் உள்ளனர். லிங்க்ட்இன்னில் 1900 பாலோயர்கள் உள்ளனர். எக்ஸ் தளத்தில் 4200 பாலோயர்கள் இருக்கிறார்கள்.


இவரது கணவர் ஜிதேஷ் படேலும் அஸ்மிதா குளோபல் பள்ளியில் இயக்குநராக இருக்கிறார். இவர்கள் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான வகுப்புகளை நடத்துவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர்.  இந்தப் பணத்தையெல்லாம் தங்களுக்குச் சொந்தமான கிங் டிரேடர்ஸ், ஜெமினி என்டர்பிரைஸ், யுனைட்டெட் என்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வசூலித்துள்ளனர்.


இதில் முறைகேடு நடப்பதாக செபிக்கு புகார்கள் போனது. இதையடுத்து அஸ்மிதா படேலுக்குச் சொந்தமான 6 நிறுவனங்களையும் தடை செய்துள்ளது செபி. மோசடியமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 53 கோடியை திருப்பிச் செலுத்துமாறும் செபி உத்தரவிட்டுள்ளது. பங்கு மூலதனங்களை வசூலிக்க இந்த நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்