டெல்லி: கரும்பு விவசாய சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளநிலையில், ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை சரி செய்வதுடன் தொடர்ந்து தேர்தல் குறித்த பணிகளையும் செய்து வருகின்றனர் அரசியல் கட்சிகள்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை ஒதுக்கப்படவில்லை. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு யார் முதலில் கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கு தான் சின்னம் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

தற்பொழுது அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்தக் கட்சி தமிழ்நாட்டில் திராவிட தெலுங்கு தேசம் என்ற கட்சியுடன் இணைந்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறதாம். எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் சீமானிடம் சின்னத்தை விட்டுத் தருவதாக அந்தக் கட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பின்னர் வழக்கை வரும் 25ம் தேதிக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}