சென்னை: இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவாளி அஜித்குமார், போராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனதாக போலீசார் அடித்து சித்திரைவதை செய்து விசாரணை நடத்தியதில் அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாதக சார்பில் திருப்புவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம் அனுமதி கொடுத்தனர். திடீர் என்று நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கின்றனர். காரணம் கேட்டால் கண்டதேவியில் தேரோட்டம் இருக்கிறது. அதற்கு இருக்கும் காவலர்களை நாங்கள் குவித்து விடுவோம் என்கின்றனர். நாங்கள் போராத்திற்கு அனுமதி மட்டும் தான் கேட்கின்றோம். பாதுகாப்பு கேட்கவில்லை. என் சொந்த நாட்டில் எங்களுக்கு எதற்கு பாதுகாப்பு. நாங்கள் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. அனுமதி இல்லை என்றாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
{{comments.comment}}