பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை

Oct 02, 2025,09:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமா மாலினியும், அனுராக் தாக்கூரும் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். பாஜக பிணத்தின் மீது அரசியல் செய்யும் கட்சிகளை பொதுமக்கள் உமிழ்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை  பேசுகையில், வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.‌ இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.




கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. டெல்லியில் இருந்து இரவோடு இரவாக விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.


கரூரில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அரசியல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மணிப்பூரில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடந்தன. அங்கு இந்த உண்மையை கண்டறியும் குழுவை அனுப்பியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

news

இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்

news

வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்

news

ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி

news

இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

news

தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!

news

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்

news

யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்

அதிகம் பார்க்கும் செய்திகள்