டெல்லி: 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்ற மசோதவை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கொரோனா காலத்தில் அமல்படுத்தவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் மக்கள் பெருந்திரள் போராட்டம் நடைபெறும்.

பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல் அமைப்பை சிதைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் குலைப்பதற்கு 11 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். அதன்படி, பெயரை மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளார்கள். ஆனால் இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே இருக்க வேண்டும். மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு 125 நாள் என்று கூறி அதற்கான தொகையை மாநிலம் 40%, யூனியன் பிரதேசம் 10% வழங்க வேண்டும் என கூறி மாநிலங்கள் மீது நிதிச்சுமையை திணிக்கிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி நிதி, பேரிடர் பெருவெள்ளம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமல், மாநிலத்தின் மீது நிதி சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா, தமிழ் மொழியை பிடிக்க வில்லையா. தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
{{comments.comment}}