டெல்லி: 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்ற மசோதவை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கொரோனா காலத்தில் அமல்படுத்தவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் மக்கள் பெருந்திரள் போராட்டம் நடைபெறும்.

பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல் அமைப்பை சிதைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் குலைப்பதற்கு 11 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். அதன்படி, பெயரை மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளார்கள். ஆனால் இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே இருக்க வேண்டும். மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு 125 நாள் என்று கூறி அதற்கான தொகையை மாநிலம் 40%, யூனியன் பிரதேசம் 10% வழங்க வேண்டும் என கூறி மாநிலங்கள் மீது நிதிச்சுமையை திணிக்கிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி நிதி, பேரிடர் பெருவெள்ளம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமல், மாநிலத்தின் மீது நிதி சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா, தமிழ் மொழியை பிடிக்க வில்லையா. தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}