சென்னை: தவெக தலைவர் டெல்லி சென்றிருப்பது ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சி. ஆனால் ஒரு போதும் பாஜகவின் முயற்சிவெற்றி பெறாது என்பது தான் உண்மை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நாங்கள் எங்களது கருத்தை சொல்லி இருக்கிறோம். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. ஆட்சியில் பங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி சேர்ந்து முடிவு எடுப்பார்கள். தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்.
கரூர் விகாரத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக விசாரித்து கொண்டிருந்தது. ஆனால், சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அனைவரையும் துன்புறுத்துகிறது. இப்போது தவெக தலைவரையும் சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்துள்ளனர். இது ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சி.

ஆனால் ஒரு போதும் பாஜகவின் முயற்சிவெற்றி பெறாது என்பது தான் உண்மை. பாஜகவினர்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் அனைத்தையும் சிதைப்பார்கள். இது தான் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
அவர்களை எதிர்த்தால் ஊழல் வழக்கு, சிபிஐ ரைடு உள்ளிட்டவற்றை கொண்டு வருவார்கள்.அவர்களுடன் சேர்ந்து விட்டால் வெள்ளை உடை அணிவித்து புனிதர் என்று பட்டம் சூட்டுவார்கள். இது தான் பாஜகவின் கடந்த கால வரலாறு என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}