"அந்த நாலு பேரும்.. மதிச்சா என்ன.. மதிக்காட்டிதான் என்ன".. செல்வராகவன் அதிரடி!

Feb 01, 2023,03:23 PM IST
சென்னை: வாழ்க்கையில் சொத்து இருந்துல்தான் நாலு பேர் மதிப்பார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த நாலு பேரும் மதிக்காமல் போனால்தான் என்ன  என்று அதிரடியாக கேட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.



இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ஏதாவது தத்துவத்தை தனது டிவிட்டரில் தட்டி விடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு தத்துவத்தை இறக்கி விட்டுள்ளார்.

செல்வராகவன் போட்டுள்ள டிவீட்டில், எல்லோரும்  சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான் என்று  கூறியுள்ளார் செல்வராகவன்.

உண்மைதான்.. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று வாழ்வதை விட நமக்காக வாழ்வதுதானே சரியாக இருக்க முடியும். அதைத்தான் இப்படி சொல்லியுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் இப்போது நடிப்பதில் பிசியாக உள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த அவர் தற்போது பகாசுரன் என்ற படத்தில் கதை நாயனாக நடிக்கிறார். மோகன் ஜி இயக்கும் இப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்