டெல்லி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அதுதான் சட்டம். அதை அவர் இன்னும் செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று காங்கிரஸ் எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங் மனுவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மிகவும் வருத்தத்துடன் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்; அரசியலமைப்பு அறிவின் களஞ்சியமாக இருக்க வேண்டிய ஆளுநருக்கு, தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை.
சொல்லப்போனால் சட்டம், முன்னுதாரணங்கள், பாரம்பரியம், அரசியலமைப்பு கலாச்சாரம் மற்றும் அதன் பண்பு என அனைத்திலும் இதுவே முறை. கடந்த காலத்தில் இது எண்ணற்ற முறை நடந்துள்ளது.

மேலும், வேறு எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க உரிமை கூட கோரவில்லை. பற்றாக்குறை என்பது வெறும் 7-8 இடங்கள் மட்டுமே, அதோடு 10-12 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எப்போதும் நிபந்தனை விதிக்கப்போகிறார்.
பிறகு இதில் என்ன பிரச்சனை? அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் முன்னுதாரணங்களை இவ்வாறு சிதைப்பது அல்லது நீர்த்துப்போகச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, இதை நான் மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். இது எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், ஆளுநரை நேற்று சந்தித்து முறைப்படி கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை அவருக்கு ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}