சென்னை: அனைத்து முக்கிய கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இதை தேர்தல் புறக்கணிப்பு என்று தான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் போட்டியிடும் அளவிற்கு தகுதியற்ற கட்சியாக இன்றைய ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது இல்லத்தில் இன்று பொங்கல் வைத்து பாஜக கட்சி தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,ஒரு போர்கலம் என்றால் 2 வீரர்கள் துணிச்சலாக போர் செய்ய வேண்டும். திமுக பேருக்கு வர்றேன்.. போருக்கு வர்றேன்.. என்று சொல்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராக இல்லை. ஏன் என்றால் நீ போர் வீரனே அல்ல. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துவார்கள். ஆதலால் திமுகவுடன் போட்டு போடும் அளவிற்கு திமுகவிற்கு தகுதி இல்லை.என் போட்டியை ஏற்றுக் கொள்ளும் தகுதி உனக்கு இல்லை என்பதைத் தான் பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. இன்று திராவிட முன்னேற்ற கழகம் வெட்கி தலைகுனிய வேண்டும்.
திமுகவுடன் போட்டிக்கு யாரும் வர மாட்டார்கள். அனைத்து முக்கிய கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இதை தேர்தல் புறக்கணிப்பு என்று தான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் போட்டியிடும் அளவிற்கு தகுதியற்ற கட்சியாக இன்றைய ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இதற்காக திமுக தான் கவலைப்பட வேண்டும். களம் சரியானதாக இருந்து கழங்கம் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நம்பிக்கையோடு போட்டிக்கு வருவார்கள். அது தான் ஜனநாயகம். திமுகவுடன் யாரும் போட்டிக்கு வரவில்லை என்றால், அது பெருமை அல்ல சிறுமை.
சீமானின் ஈவெரா பற்றிய கருத்துகள் எல்லாம் பாஜகவின் கருத்துகள். காலம் காலமாக பாஜக சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்கள் கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். எங்கள் வழியில் வந்திக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்கள் கருத்தியலுக்கு கிடைத்துள்ள பலமாகவும், நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஒரு ஆதரவாகவும் இதனைப் பார்க்கிறேன். இனிமேல் ஈவெராவை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் என்பது எனது கருத்து. பாஜகவின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களுடைய தீம் ஐ அவர் பேசுகிறார். அவ்வளவுதான். அனைவருக்கும் தனித்தனி கொள்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!
{{comments.comment}}