நீதி கேட்பதை தடுக்கும்.. திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. டாக்டர் தமிழிசை

Jan 03, 2025,03:28 PM IST

சென்னை: நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிக்க தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக மகளிர் அணி சார்பில் இன்று பேரணி நடந்தது. இந்தப் பேரணியை நடிகை குஷ்பு தொடங்கி வைத்தார். 


இந்த பேரணி திண்டுக்கல், திருச்சி விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த பாஜகவினர். திட்டமிட்ட படி பேரணியை தொடங்கிய சிறிது நேரத்திலேயே  குஷ்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.




இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக  மகளிர் அணி தலைவி உமாரதி செயலாளர் பிரமிளா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.... 


அதே மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும். திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்