சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்ந்ததே இப்போதைய முதல்வர்தான். எதிர்க்கட்சி வரிசையில் அவர் இருந்தபோது செந்தில் பாலாஜி துரோகி, ஆனால் இப்போது திமுகவுக்கு வந்தவுடன் தியாகியாகி விட்டாரா என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது. இதையடுத்து அவர் இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலையாகி வெளியே வரவுள்ளார். இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொண்டாட்டங்களை டாக்டர் தமிழிசை விமர்சித்து ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அவர் போட்டுள்ள பாயின்ட் பை பாயின்ட் கருத்து:

1. செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்.... எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?....
2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்.... தியாகி என்று கூறுவதற்கு?....
3.INDI... கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல .....
4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக
5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்....
6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல
7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார், எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு
ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லும் இந்த அரசியல் முரண்பாடு தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலும் காணப்படுகிறது. முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த தலைவர்கள் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கி, வழக்கு தொடரப்பட்டு பின்னர் பாஜகவில் இணைந்து நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். அதேபோல பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குத் தாவிய தலைவர்களும் பலர் தேசிய அளவில் உள்ளனர். இந்த முரண்பாட்டு அரசியல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரந்துபட்டு இருக்கிறது!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}