மீண்டும் சிறையில் செந்தில் பாலாஜி.. 16ம் தேதி ஜாமீன் கோரி மனு

Aug 12, 2023,04:10 PM IST
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது கைது செல்லும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை கஸ்டடிக்கும் அது அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை செஷன்ஸ் கோர்ட், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுமதி அளித்தது. அதன் பேரில் செந்தில் பாலாஜியைக் கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை அவரை கடந்த 5 நாட்களாக விசாரித்து வந்தது.

விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி மீது இன்று ஒரு குற்றப் பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்