மீண்டும் சிறையில் செந்தில் பாலாஜி.. 16ம் தேதி ஜாமீன் கோரி மனு

Aug 12, 2023,04:10 PM IST
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது கைது செல்லும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை கஸ்டடிக்கும் அது அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை செஷன்ஸ் கோர்ட், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுமதி அளித்தது. அதன் பேரில் செந்தில் பாலாஜியைக் கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை அவரை கடந்த 5 நாட்களாக விசாரித்து வந்தது.

விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி மீது இன்று ஒரு குற்றப் பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்