பல பெண்களை சீரழித்து விட்டார்.. தேவெ கெளடா பேரன் மீது பரபரப்பு புகார்.. விசாரணைக்கு உத்தரவு!

Apr 28, 2024,11:09 AM IST

பெங்களூரு: உதவி கேட்டு வந்த பல பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி சீரழித்து விட்டார் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் மகனும், ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், பிரஜ்வால் ரேவண்ணா மீது எழுந்துள்ள புகார்கள் குறித்த விசாரிக்க சிறப்பு புலனாய்வுநக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹசன் மாவட்டத்தில் பிரஜ்வால் ரேவண்ணா குறித்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகின்றன. பெண்கள் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை இது உறுதி செய்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.


கர்நாடக மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்தது. அதன் பேரில் தற்போது இந்த சிறப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வால்




இதற்கிடையே, தன் மீது எழுந்த புகார்கள் மற்றும் விசாரணையைத் தொடர்ந்து பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி டெக்கான் ஹெரால்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னதாக பிரஜ்வால் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அவர்களுடன் வீடியோ காலில் பேசி ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களை மிரட்டியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல பெண்கள் புகார்களும் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பால் தற்போது தேவெ கெளடா குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.


தேவெ கெளடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன்தான் பிரஜ்வால். ஹசன் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்து  வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வாலே போட்டியடுகிறார்.


சாதாரணமான புகார் அல்ல




பிரஜ்வால் மீதான புகார்கள் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில்,  இது சாதாரணமான புகார் அல்ல. மிக மிக சீரியஸானது. பிரதமர் பதிலளிக்க வேண்டும். விஜயேந்திரா எதியூரப்பா பதிலளிக்க வேண்டும். ஷோபா, குமாரசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் தர வேண்டும். அவர்களது இமேஜை கெடுக்க மகளிர் ஆணையம் முயல்வதாக அவர்கள் கூறியதாக கேள்விப்பட்டேன். வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டு விளக்கம் கொடுங்கள். ஊடகங்களும் இதுகுறித்து நிறைய செய்தி வெளியிட்டுள்ளன. மக்களும் இதைப் பார்த்துள்ளனர். எனவே விளக்கம் தர வேண்டியது அவர்களது கடமையாகும் என்றார்.


சர்ச்சைக்குரிய பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டுள்ள ஹசன் தொகுதியில் 26ம் தேதிதான் வாக்குப்பதிவு நடந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்