சென்னை: கோடை காலத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி வெயில் அதிகரித்து வரும் நிலையை கூட பொருட்படுத்தாமல், தொடர் விடுமுறையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை படை எடுக்க துவங்கி விட்டனர். ஆனால் 10 ,11, 12,வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் நிறைவடைந்துவிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதனால் ஏப்ரல் இறுதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.
இந்த கோடை விடுமுறை காலத்தில் ஏராளமான மக்கள் தனது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிப்பது வழக்கம். இதனால் பொதுமக்கள் ரயில், மற்றும் பேருந்து சேவைகளை அதிக அளவில் பயன்படுத்துவர். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டல் நெரிசல் அதிகரித்து காணப்படும். பேருந்துகளின் தேவையும் அதிகரிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக 20 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே முதல் வாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}