ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹம்பர்க் நகரில் உள்ள ஜெஹோவா விட்னஸ் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. வடக்கு ஹம்பர்க் நகரில் உள்ள இந்த மையத்தில் பெரும் திரளானோர் கூடியிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த இடமே போர்க்களமாகியிருந்தது.
யார் அந்த நபர், எதற்காக சுட்டார் என்று தெரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை.. பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜெஹோவா மதப் பிரிவு நம்பிக்கையாளர்கள் இணைந்து இந்த மையத்தில் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியில் ஜெஹோவா பிரிவைச் சேர்ந்தவர்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். ஹம்பர்க்கில் 3800 பேர் உள்ளனர். 19வது நூற்றாண்டில் உருவான மதப் பிரிவு இது. அகிம்சையை வலியுறுத்தி இவர்கள் போதனையில் ஈடுபடுவர். வீடு வீடாக சென்று மதப் பிரச்சாரம் செய்வது இவரது வழக்கம்.
ஜெர்மனியில் சமீப ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் சில தீவிரவாத சம்பவங்கள் ஆகும். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸையொட்டி நடந்த சந்தையின்போது தீவிரவாதிகள் லாரியை விட்டு சரமாரியாக ஏற்றிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அந்த செயலில் ஈடுபட்ட நபர் துனிஷியாவைச் சேர்ந்தவர் என்றும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்றும் பின்னர் தெரியவந்தது.
இதேபோல வலதுசாரி தீவிரவாத செயல்களும் அதிகரித்துள்ளன. 2020ம் ஆண்டு வலது சாரி தீவிரவாதி ஒருவர் ஹனாவ் நகரில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}