வாஷிங்டன்: இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
இசைக்கலைஞர்களுக்கு உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருது. இந்த விருது அமெரிக்காவைச் சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1951ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான 66வது கிராமி விருது வழங்கும் விழா பிப்ரவரி 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் எஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு விருது கிடைத்துள்ளது. பாடகர் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இக்குழுவினரின் "திஸ் மொமென்ட்" என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பத்திற்கு கிடைத்த நிலையில், இந்தாண்டு சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் கிராமி விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சங்கர் மகாதேவன் பேசுகையில், எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}