மும்பை : தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய படக்குழுவினர் மணிப்பூர் சம்பவத்தையும் மணிப்பூர் ஃபைல்சாக எடுக்கலாம் என மத்திய அரசை நேரடியாக விமர்சித்து சாம்னா பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பாலிவுட் டைரக்டர் விக்வேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று படம் ரிலீசானது. இதில் காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி விவரித்திருந்தனர். இந்த படம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக பெரும் விவாதித்திற்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நாட்டையே உலுக்கிய மணிப்பூர் பற்றி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளும், அராஜகங்களும் காஷ்மீரையே மிஞ்சி விட்டன. சமீப காலமாக தஷ்கின்ட் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளையும் கொடுமைகளையும் வைத்து மணிப்பூர் ஃபைல்ஸ் படத்தையும் எடுக்கிறார்கள்.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடவில்லை. பிரதமர் மோடியும் அது பற்றி பேசவில்லை. இது 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானம். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர். அப்படி செய்தவர்களுக்கு தண்டனை ஏதும் கிடையாது.
மணிப்பூர் சம்பவத்திற்கு அந்த மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதே காரணம். மணிப்பூரில் 60,000 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்படியானால் அங்கு நிலைமை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கையை மீறி போய் விட்டது என்று தான் அர்த்தம் என மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}