காவிரியில் தண்ணீர் இல்லை.. பேசித் தீர்க்க வேண்டும்.. சிவராஜ் குமார்

Sep 21, 2023,08:59 AM IST

பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலத் தலைவர்களும் பேசீித் தீர்வு காண வேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வருகிறது. எங்களிடம் தண்ணீர் இல்லை என்று அது கூறுகிறது. ஆனால் கர்நாடகத்திடம் போதிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனாலும் தர மாட்டேன் என்று மறுப்பதாக தமிழ்நாடு கூறி வருகிறது.




இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.  மத்திய அரசு, கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைவருமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில்தான் நமக்குத் தீர்வு கிடைக்கும்  என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


Video: சிவராஜ் குமார் கோரிக்கை


இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு காவிரிதான் முதுகெலும்பு. விவசாயிகள் ஏற்கனவே போதுமான மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இரு மாநிலத் தலைவர்களும், கோர்ட்டும் அனைத்து நிலவரங்களையும் ஆராய்ந்து, உரிய சுமூகத் தீர்வைக் காண முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதற்கிடையே, கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய அது கோரிக்கை விடுத்திருந்தது. அநத மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்