பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலத் தலைவர்களும் பேசீித் தீர்வு காண வேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வருகிறது. எங்களிடம் தண்ணீர் இல்லை என்று அது கூறுகிறது. ஆனால் கர்நாடகத்திடம் போதிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனாலும் தர மாட்டேன் என்று மறுப்பதாக தமிழ்நாடு கூறி வருகிறது.
இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. மத்திய அரசு, கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைவருமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில்தான் நமக்குத் தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Video: சிவராஜ் குமார் கோரிக்கை
இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு காவிரிதான் முதுகெலும்பு. விவசாயிகள் ஏற்கனவே போதுமான மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இரு மாநிலத் தலைவர்களும், கோர்ட்டும் அனைத்து நிலவரங்களையும் ஆராய்ந்து, உரிய சுமூகத் தீர்வைக் காண முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதற்கிடையே, கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய அது கோரிக்கை விடுத்திருந்தது. அநத மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
{{comments.comment}}