காவிரியில் தண்ணீர் இல்லை.. பேசித் தீர்க்க வேண்டும்.. சிவராஜ் குமார்

Sep 21, 2023,08:59 AM IST

பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலத் தலைவர்களும் பேசீித் தீர்வு காண வேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வருகிறது. எங்களிடம் தண்ணீர் இல்லை என்று அது கூறுகிறது. ஆனால் கர்நாடகத்திடம் போதிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனாலும் தர மாட்டேன் என்று மறுப்பதாக தமிழ்நாடு கூறி வருகிறது.




இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.  மத்திய அரசு, கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைவருமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில்தான் நமக்குத் தீர்வு கிடைக்கும்  என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


Video: சிவராஜ் குமார் கோரிக்கை


இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு காவிரிதான் முதுகெலும்பு. விவசாயிகள் ஏற்கனவே போதுமான மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இரு மாநிலத் தலைவர்களும், கோர்ட்டும் அனைத்து நிலவரங்களையும் ஆராய்ந்து, உரிய சுமூகத் தீர்வைக் காண முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதற்கிடையே, கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய அது கோரிக்கை விடுத்திருந்தது. அநத மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்