சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியிலிருந்து தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள எம்.வி.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் எம்.வி.கருப்பையா, நாளை காலை 9.30 மணிக்கு கூடும் சட்டசபைக் கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

தமிழக வெற்றி கழக வேட்பாளராக சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட எம் வி கருப்பையா அங்கு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு வந்தவர் ஆவார்.
அதிமுக சார்பில் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிட்டு சட்டசபைக்கு முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு அங்கு சீட் தரப்படாத நிலையில் தவெகவில் இணைந்து சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்று, தற்காலிக சபாநாயகர் பதவியையும் எட்டியுள்ளார்.
நாளை சட்டசபையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு முடிந்த பின்னர், வருகிற 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். இதில் தவெக வேட்பாளர்கள் புதிய சபாநாயகர், துணை சபாநாயகராக தேர்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
மயக்கமும் தயக்கமும்
பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!
காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
{{comments.comment}}