ஹைதராபாத் : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகியான கல்பனா ராகவேந்தர், முன்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்தரின் மகள். இவர் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்காமல் பூட்டி இருந்துள்ளது. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு நிர்வாகத்தினர் சென்னையில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் தொடர்ந்து கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்த குடியிருப்பு நிர்வாகம், போலீசாரின் உதவியுடன் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்க நிலையில் இருந்த கல்பனாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கல்பனாவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கல்பனா, பல ஹிட்டான பாடல்களை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி உள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றி உள்ளார். அவர் 2010ம் ஆண்டு மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பட்டத்தையும் வென்றுள்ளார். 5 வயதில் தன்னுடைய இசை பயணத்தை துவங்கிய கல்பனா 1500 பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி உள்ளார். போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு பாடல்தான் கல்பனா பாடிய முதல் பாடலாகும். அந்தப் பாடலே அவரது அடையாளமாக இன்று வரை உள்ளது.
1986ம் ஆண்டு கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் இவர் போட்டியாளராக கலந்த கொண்டுள்ளார். இவர் பாடிய பாடல்களில் மாமன்னன் படத்தில் "கொடி பறக்குற காலம்" , 36 வயதினிலே படத்தில் "நான் போகிறேன்" ஆகிய பாடல்கள் சமீப காலத்தில் ஹிட் ஆன பாடல்கள் ஆகும்.
மிகவும் கலகலப்பாக இருக்கக் கூடியவர் கல்பனா. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டித் தொடரில் நடுவராக பங்கேற்றப்போது அவர் மிகவும் ஜாலியாக பங்கேற்பார். பேசுவார். அப்படிப்பட்டவருக்கு என்ன பிரச்சினை இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தத்தில் அவர் இருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}