சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியுடன் வாக்குவாதம்.. சரமாரி தாக்குதல்.. பாடகர் வேல்முருகன் கைது!

May 13, 2024,01:34 PM IST

சென்னை: பிரபல பாடகர் வேல்முருகன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியிடம் விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.


சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்லக்கூடாது என பேரிகார்ட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆர்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், ‌நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை  சிக்னல் அருகே பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி விட்டு காரில் செல்ல முயன்று உள்ளார்.

அங்கிருந்த மெட்ரோ ரயில் பணி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல், வேல்முருகன் செய்த செயலை பார்த்துள்ளார். பின்னர் வேல் முருகனிடம் சென்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லக்கூடாது எனக் கூறினார். 




அதிகாரியின் வார்த்தைகளை கேட்காமல் வேல்முருகன் விதிகளை மீறி அப்பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கோபமடைந்த வேல்முருகன், மெட்ரோ ரயில் அதிகாரியை கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 


இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகனை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்