சென்னை: பிரபல பாடகர் வேல்முருகன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியிடம் விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்லக்கூடாது என பேரிகார்ட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை சிக்னல் அருகே பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி விட்டு காரில் செல்ல முயன்று உள்ளார்.
அங்கிருந்த மெட்ரோ ரயில் பணி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல், வேல்முருகன் செய்த செயலை பார்த்துள்ளார். பின்னர் வேல் முருகனிடம் சென்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லக்கூடாது எனக் கூறினார்.

அதிகாரியின் வார்த்தைகளை கேட்காமல் வேல்முருகன் விதிகளை மீறி அப்பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கோபமடைந்த வேல்முருகன், மெட்ரோ ரயில் அதிகாரியை கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}