சென்னை: பிரபல பாடகர் வேல்முருகன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியிடம் விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்லக்கூடாது என பேரிகார்ட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை சிக்னல் அருகே பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி விட்டு காரில் செல்ல முயன்று உள்ளார்.
அங்கிருந்த மெட்ரோ ரயில் பணி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல், வேல்முருகன் செய்த செயலை பார்த்துள்ளார். பின்னர் வேல் முருகனிடம் சென்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லக்கூடாது எனக் கூறினார்.
அதிகாரியின் வார்த்தைகளை கேட்காமல் வேல்முருகன் விதிகளை மீறி அப்பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கோபமடைந்த வேல்முருகன், மெட்ரோ ரயில் அதிகாரியை கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}