சென்னை: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். தனது தந்தை நலமாக இருப்பதாகவும், வெளியானது தவறான செய்தி என்றும் அவர் விளக்கியுள்ளார்.
கர்நாடக இசை கலைஞரும், பிரபல பின்னணிப் பாடகருமான கே.ஜே யேசுதாஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தனித்துவமான காந்தக் குரலால் மக்களிடையே ஈர்க்கப்பட்டு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு,கன்னடம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவர் முதன் முதலில் 1962 ஆம் ஆண்டு மலையாள மொழியில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
இவரின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் யேசுதாஸுக்கு வாய்ப்புகள் கிடைத்து கொஞ்சம் குமரி படத்தின் பாடல்கள் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், என முன்னணி நட்சத்திரங்களுக்கு பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தனது வசீகரிக்கும் குரலால் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற யேசுதாஸ் தமிழில் 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இதுவரை எந்த பாடகர்களும் சாதிக்காத சாதனையை யேசுதாஸ் நிகழ்த்தியுள்ளார். அதாவது பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகராக வலம் வந்த யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி, 45 முறை சிறந்த பாடகர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸும் பின்னணி பாடகர் ஆக இருக்கிறார்.
தற்போது 85 வயதாகும் யேசுதாஸுக்கு வயது மூப்பின் காரணமாக திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் இந்த செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். அப்படியெல்லாம் இல்லை. அப்பா நலமாக இருக்கிறார். வெளியானது தவறான செய்தி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் யேசுதாஸுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், உண்மையில் யேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று விளக்கியுள்ளனர்.
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}