சென்னை: அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கெளரவம் செய்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது.

இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது. கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆர்மி பயிற்சி அகாடமியில் சிவகார்த்திகேயன் பயிற்சி பெற்றதாகவும், துப்பாக்கி எப்படி பிடிப்பது,எப்படி சுடுவது என்பதற்காக பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்ததாக அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் கதையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து அனுமதி வாங்கி பிறகு தான் திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தார்களாம்.
இந்நிலையில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்தார் என்று கூறி அவரை கெளரவித்து பாராட்டியுள்ளனர். இந்த கெளரவத்தால் தான் நெகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}