சென்னை: அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கெளரவம் செய்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது.
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது. கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆர்மி பயிற்சி அகாடமியில் சிவகார்த்திகேயன் பயிற்சி பெற்றதாகவும், துப்பாக்கி எப்படி பிடிப்பது,எப்படி சுடுவது என்பதற்காக பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்ததாக அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் கதையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து அனுமதி வாங்கி பிறகு தான் திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தார்களாம்.
இந்நிலையில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்தார் என்று கூறி அவரை கெளரவித்து பாராட்டியுள்ளனர். இந்த கெளரவத்தால் தான் நெகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}