விருநகர்: சிவகாசி அருகே நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இறந்தனர். அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வந்த நிலையில், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு வயது 55. இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட செங்கமலப்பட்டியில் சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து அதிக ஆட்களை வைத்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் பட்டாசுகள் அதிக அளவில் வைத்திருந்ததும் தான் வெடி விபத்திற்கு காரணமாக செல்லப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்து, உடலையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}