சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: இறந்தவர்களின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்

May 10, 2024,03:37 PM IST

விருநகர்: சிவகாசி அருகே நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இறந்தனர். அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வந்த நிலையில், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.


சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு வயது 55. இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட செங்கமலப்பட்டியில் சுதர்சன்  பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.




இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை  சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து அதிக ஆட்களை வைத்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் பட்டாசுகள் அதிக அளவில் வைத்திருந்ததும் தான் வெடி விபத்திற்கு காரணமாக செல்லப்பட்டு வருகிறது.


இந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்து, உடலையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்