சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: இறந்தவர்களின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்

May 10, 2024,03:37 PM IST

விருநகர்: சிவகாசி அருகே நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இறந்தனர். அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வந்த நிலையில், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.


சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு வயது 55. இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட செங்கமலப்பட்டியில் சுதர்சன்  பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.




இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை  சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து அதிக ஆட்களை வைத்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் பட்டாசுகள் அதிக அளவில் வைத்திருந்ததும் தான் வெடி விபத்திற்கு காரணமாக செல்லப்பட்டு வருகிறது.


இந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்து, உடலையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்