ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது சரமாரி துப்பாக்கிச் சூடு.. மக்கள் முன்பு நடந்த ஷாக்!

May 15, 2024,07:16 PM IST

பிராஸ்டிலோவா: ஸ்லேவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சரமாரியாக சுடப்பட்டார். படுகாயமடைந்தநிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


ஸ்லோவேக்கியா தலைநகர் பிராஸ்டிலோவாவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹான்ல்டோவா என்ற நகரில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். சமுதாயக் கூடம் ஒன்றில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சிக்கு பிரதமர் பிகோ வந்தபோது, திடீரென ஒரு நபர் சரமாரியாக சுட ஆரம்பித்தார். பிரதமர் பிகோவைக் குறி வைத்து அவர் சுட்டார். பல ரவுண்டு அவர் சுட்டதில் பிகோ படுகாயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்து விழுந்த பிரதமர் பிகோவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.


இந்த சம்பவம் குறித்து ஸ்லோவேக்கியா அதிபர் சுசானா கபுடோவா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் பிகோவின் பாப்புலிஸ்ட் நேஷனலிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.


பிரதமர் ராபர்ட் பிகோவின் உடல்நலம் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரிலும், நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பிகோ, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்