ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது சரமாரி துப்பாக்கிச் சூடு.. மக்கள் முன்பு நடந்த ஷாக்!

May 15, 2024,07:16 PM IST

பிராஸ்டிலோவா: ஸ்லேவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சரமாரியாக சுடப்பட்டார். படுகாயமடைந்தநிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


ஸ்லோவேக்கியா தலைநகர் பிராஸ்டிலோவாவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹான்ல்டோவா என்ற நகரில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். சமுதாயக் கூடம் ஒன்றில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சிக்கு பிரதமர் பிகோ வந்தபோது, திடீரென ஒரு நபர் சரமாரியாக சுட ஆரம்பித்தார். பிரதமர் பிகோவைக் குறி வைத்து அவர் சுட்டார். பல ரவுண்டு அவர் சுட்டதில் பிகோ படுகாயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்து விழுந்த பிரதமர் பிகோவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.


இந்த சம்பவம் குறித்து ஸ்லோவேக்கியா அதிபர் சுசானா கபுடோவா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் பிகோவின் பாப்புலிஸ்ட் நேஷனலிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.


பிரதமர் ராபர்ட் பிகோவின் உடல்நலம் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரிலும், நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பிகோ, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்