தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

May 09, 2026,03:48 PM IST

சென்னை : தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விசிக தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறி விட்டார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தவெக ஆதரவு அளிக்கும் படி கேட்டது. முதல் ஆளாக தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்தது 5 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக.,விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து விட்டன.


இதனால் விஜய் தலைமையில் தவெக தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் 116 ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பதால் 2 எம்எல்ஏ.,க்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால் தனது முடிவை அறிவிக்க திருமாவளவன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். அமைச்சர் பதவி, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி எதிர்பார்ப்பதால் தான் இந்த தாமதம் என சொல்லப்பட்டது. ஆனால் விசிக தரப்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விசிக கட்சி நிர்வாகிகள் கூறி விட்டனர்.




இதனால் திருமாவளவன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், விசிக.,வும் தவெக.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


நிபந்தனையற்ற ஆதரவு என விசிக தரப்பில் சொல்லப்பட்டாலும், ஆதரவு அளிக்க தவெக.,விற்கு 2 கோரிக்கைகளை விசிக முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தர வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை தவெக தரப்பிடம் விசிக முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


அதிகாரப்பூர்வமாக வரும் வரை எதுவுமே உறுதியில்லை. இதற்கிடையே, ஆளுநர் அர்லேகர் இன்று இரவு கேரளாவுக்குப் புறப்பட்டுப் போகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதற்குள் அவரை சந்திக்க விஜய்யும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இரண்டெழுத்து மந்திரம்!

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!

news

நெருங்கி வரும் பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க இன்னும் சிக்கல் தீரல.. என்ன செய்வார் ஆளுநர்?

news

என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்