கடும் நிதி நெருக்கடி, மூலதனத்தை திரட்டுவதில் சிக்கல்.. தனது சேவையை நிறுத்திக் கொண்டது கூ!

Jul 04, 2024,10:22 AM IST

பெங்களூரு:   மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான கூ நிதி நெருக்கடி காரணமாக அதன் சேவையை நிறுத்தி விட்டது. நேற்றுடன் கூ வின் சேவை முடிவுக்கு வந்தது.


கடந்த 2019ம் ஆண்டு நிறுவனமாக துவக்கப்பட்டது கூ தளம். இந்தியாவின் டிவிட்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சமூக வலைதளம் இது. இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவங்கினார்கள். இந்த சேவையை தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர். மாதம் ஒரு கோடி பயனர்கள் இருந்தனர். 9 ஆயிரம் பிரபலங்கள் இதில் இருந்தனர்.




பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இது செயல்பட்டது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த தளத்தை  பலரும் பயன்படுத்தி வந்தனர். டிவிட்டருக்கு மாற்றாக இது கூறப்பட்டாலும் கூட, பெரிய அளவில் இது வளரவில்லை. காரணம், ஒரு சார்பான அரசியல் தளமாக இது மாறிப் போனதுதான். அது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, புதிய மூலதனம் திரட்டுவதில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் அந்நிறுவனம் நொடித்துப் போய் விட்டது. 


இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக தற்போது இந்த நிறுவனத்தை நிரந்தமாக மூடி விட்டது கூ நிர்வாகம். இந்த அறிவிப்பை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதேசமயம், தாங்கள் மீண்டும் வருவோம் என்றும், கம்பேக் இந்த துறை சார்ந்தே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 


நேற்றுடன் முடிவுக்கு வந்த கூ, கிட்டத்தட்ட எக்ஸ் தளம் போலவே இருந்தது. பிரேசில் வரை இதன் பயன்பாடு வியாபித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்