மும்பை: தனது முன்னாள் காதலியின் வீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிய போது எதிர்பாராத விதமாக தனது காதலியின் தாயாருடன் ஒரே இடத்தில் மறைந்து கொண்ட சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சொஹைல் கான்.
நடிகர் சல்மான்கானின் சகோதரர் தான் சொஹைல் கான். இன்னொரு சகோதரர் ஆர்பாஸ்கான். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொலைக்காட்சி தொடரில் அதாவது ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர். அந்த ஷோவில் கலந்துகொண்டு சொஹைல் கான் சில மலரும் நினைவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் காதலி ஒருவரின் வீட்டில் ஒரு முறை நாங்கள் எல்லோரும் கூடி இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினோம். அப்போது நான் ஒரு வார்ட் ரோபில் சென்று ஒளிந்து கொண்டேன். அதே இடத்தில் எனது காதலியின் தாயாரும் வந்து ஒளிந்து கொண்டார். அந்த இடம் இருட்டாக இருந்தால் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் உள்ளே எனது காதலி தான் எனக்கு அருகில் ஒளிந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் ஜாலியாக பேசினேன். அதைக் கேட்டு அவர் கலகலவென்று சிரித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சற்று நேரத்தில் விளக்குகள் எல்லாம் போடப்பட்டு ஆட்டம் முடிந்ததாக சொன்ன போது நாங்கள் வெளியே வந்தோம். அப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் என்னுடைய காதலியின் தாயாரிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறி சிரித்தார்.
இதன் பிறகு அர்பாஸ் கான் மகன் அர்கான் கான் தனது அனுபவங்களை கூறினார். இந்த தொடரானது ஆறு எபிசோட் கொண்டதாக ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு யூட்யூபில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த ஷோவில் அர்கான் காணின் தாயாரான மலைக்கா அரோரா மற்றும் சல்மான்கான் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}