மும்பை: தனது முன்னாள் காதலியின் வீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிய போது எதிர்பாராத விதமாக தனது காதலியின் தாயாருடன் ஒரே இடத்தில் மறைந்து கொண்ட சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சொஹைல் கான்.
நடிகர் சல்மான்கானின் சகோதரர் தான் சொஹைல் கான். இன்னொரு சகோதரர் ஆர்பாஸ்கான். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொலைக்காட்சி தொடரில் அதாவது ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர். அந்த ஷோவில் கலந்துகொண்டு சொஹைல் கான் சில மலரும் நினைவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் காதலி ஒருவரின் வீட்டில் ஒரு முறை நாங்கள் எல்லோரும் கூடி இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினோம். அப்போது நான் ஒரு வார்ட் ரோபில் சென்று ஒளிந்து கொண்டேன். அதே இடத்தில் எனது காதலியின் தாயாரும் வந்து ஒளிந்து கொண்டார். அந்த இடம் இருட்டாக இருந்தால் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் உள்ளே எனது காதலி தான் எனக்கு அருகில் ஒளிந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் ஜாலியாக பேசினேன். அதைக் கேட்டு அவர் கலகலவென்று சிரித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சற்று நேரத்தில் விளக்குகள் எல்லாம் போடப்பட்டு ஆட்டம் முடிந்ததாக சொன்ன போது நாங்கள் வெளியே வந்தோம். அப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் என்னுடைய காதலியின் தாயாரிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறி சிரித்தார்.
இதன் பிறகு அர்பாஸ் கான் மகன் அர்கான் கான் தனது அனுபவங்களை கூறினார். இந்த தொடரானது ஆறு எபிசோட் கொண்டதாக ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு யூட்யூபில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த ஷோவில் அர்கான் காணின் தாயாரான மலைக்கா அரோரா மற்றும் சல்மான்கான் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}